திங்கள், 10 மே, 2010

சுயத்திற்கு மரித்தல்

1.   நீங்கள் மறக்கப்பட்டு,  அலசட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிடப்படும் சமயங்களில்.................ஏற்பட்ட அவமானங்களுக்காகச் சற்றேனும் மனம் புண்படாமல்  "கிறிஸ்துவுக்காய் பாடுபட  நானும்  தகுதி பெற்றேனே! என்ற மகிழ்ச்சியில் மாத்திரம்  நீங்கள்  நிலைத்திருந்தால்,   அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!

2.  உங்கள்  நன்மை  தீமையாகப் பேசப்பட்டு,  உங்கள்  விருப்பங்கள் மறுக்கப்பட்டு,  உங்கள் கருத்துக்கள்  பகடி செய்யப்படும் சமயங்களில்..............உள்ளத்தில்  கோபப்படாமல்,  நியாயத்தைத் தட்டிக் கேட்க முயற்சிக்காமல்,   அன்பார்ந்த  மௌனத்தோடு  நீங்கள் பொறுமையாய்யிருந்தால்,  அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!

3.  எந்த ஒழுங்கின்மையையும்,  காலந்தாழ்த்தி  வருதலையும்,  வீண் விரயங்களையும், ஆவிக்குறிய  உணர்வற்ற செயல்களையும் .......... "இயேசுவைப் போலவே"  அன்பு கலந்த பொறுமையுடன்  சகித்துக்கொண்டால்,   அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

4.  என் பெயரைக் குறிப்பிடவேண்டும்....,  என் செயல்கள்  பேசப்படவேண்டும்.... போன்ற  விருப்பம்  துளிகூட  இல்லாமல்.............."அறியப்படாதவனாகவே" இருந்துவிட மெய்யான விருப்பத்தை  நீங்கள்  பெற்றிருந்தால்,  அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

5.  தேவசித்தத்தின்படியான  எவ்வித உணவானாலும்,  உடையானாலும், சீதோஷண  நிலையானாலும்,  சமுதாயமானாலும்,  தனிமையானாலும் அவைகளில் நீங்கள் மனநிறைவு கொண்டிருந்தால்,   அதுவே   சுயத்திற்கு  மரித்தல்!

6.  தேவை  மிகுந்த  இக்கட்டான  சூழ்நிலைகளில்  நீங்கள்  இருக்கும்போது உங்கள்  சகோதரனின்  தேவை சந்திக்கப்பட்டு  ஐசுவரியமடைவதைக் காணும்போது............. சிறிதேனும்  பொறாமை  உணர்வு  கொள்ளாமல், தேவனிடம் கேள்வி கேட்காமல் சகோதரனோடு சேர்ந்து உங்களால் களிகூர முடியும் என்றால்,  அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

7.  உங்களைவிட குறைவான  ஒருவரின் புத்திமதியையும், கடிந்துகொள்ளுதலையும்...............இருதயத்தில் எவ்வித எதிர்ப்பும்  கோபமும் கொள்ளாமல், அவைகளை உள்ளத்தில் மாத்திரமல்லாமல் வெளியரங்கமாயும் நீங்கள்  தாழ்மையுடன்  ஏற்றுக்கொள்ள முடியுமென்றால்அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!


"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான்  வெறுத்து  தன் சிலுவையை  அனுதினமும் எடுத்துக்கொண்டு , என்னைப் பின்பற்றக்கடவன்.''    (லூக்கா   9-23)



http://www.cfcindia.com/tamil/

 



2 கருத்துகள்:

kiristians சொன்னது…

dear cheenu, bro. in Christ,

"suyathtirkku marithtal" its a good meditation.i believe its from your life experiences.its the working of HolySpirit.

sarav

தயாளன் சொன்னது…

நன்றி சகோதரரே!

'சுயத்திற்கு மறித்தல்" என்ற தலைப்பில்
நான் எழுதிய இந்த இடுக்கை எங்கள் சபை வெளியிடும் சிறு பிரதியிலிருந்து எடுத்தது. நாங்களும் இதை எங்கள் வாழ்வில் கடைபிடிக்க பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

இந்த தளத்தையும் பாருங்களேன்
http://www.cfcindia.com