வெள்ளி, 10 டிசம்பர், 2010

"கந்தை ஆடையில்" தெரிந்து கொண்ட கர்த்தர்! (FOUND BY GOD IN RAG CLOTHES)

           "தேவனின் கருப்பு வைரம்" என அழைக்கப்பட்ட இளம் ஆப்பிரிக்க மிஷனரி சாமுவேல் மோரிஸ், ஒருசமயம் தேவனால் உந்தப்பட்டு நியுயார்க் பட்டணம் சென்றார். அங்கு "ஸ்டீபன் மெரிட்" என்ற ஐசுவரியமான சுவிஷேச பிரசங்கியிடம் "நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும்" என கூறுவதற்காகவே தேவன் சாமுவேல் மோரிஸை அனுப்பியிருந்தார்! அங்கு, அவசரமாய் ஒரு தனவந்தரின் அடக்க நிகழ்ச்சிக்கு அவர் புறப்பட்டு விட்டார். தன்னைக் காண வந்த மோரிஸை தன் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டார். வழியில் இரண்டு குருமார்களையும் ஏற்றிக்கொண்டார்! அந்த வெள்ளைக்கார குருமார்கள், கந்தை ஆடையில் இருந்த மோரிஸை "இந்த கரிய உருவம்" எங்கே இறங்கும்? என்ற பாவனையில் இகழ்ச்சியுடன் பார்த்தார்கள். இந்த இகழ்ச்சியைப் பொருட்படுத்தாத மோரிஸ் "குதிரை வண்டியில் நீங்கள் எப்போதாவது ஜெபித்ததுண்டா?" என ஸ்டீபன் மெரிட்டிடம் கேட்டார்! அதற்கு மெரிட் "இல்லை" எனக்கூற, "இப்போது ஜெபிப்போம்!" என முழங்கால் படியிட்டு ஜெபிக்க, அங்கேயே ஸ்டீபன் மெரிட் அபிஷேகம் பெற்றார். ஓர் தெய்வ பயம் கொண்ட அதிர்ச்சி, அந்த குருமார்களை ஆட்கொண்டது! அடக்க நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, ஓர் துணிக்கடையில் வண்டியை நிறுத்தி, விலை உயர்ந்த ஆடையை  வாங்கித் தந்து உடுத்தும்படி மோரிஸிடம் குருமார்கள் வற்புறுத்தினர். அதை அவர் அணிந்தார்! கண்ணாடியில் அந்த ஆடை, மிடுக்காய் இருந்தது! ஆனால், களைந்து போட்ட "தன் கந்தை ஆடையை" பார்த்த சாமுவேல் மோரிஸுக்கு, அதுவே "மிக அருமையானதாக" காட்சி அளித்தது "என்னை தேவன், இந்த கந்தை ஆடையில் கண்டுதான், தெரிந்தெடுத்தார்!" என கூறி அதை பத்திரப்படுத்தி, தன் அலுவலகத்தின் கண்ணாடிப் பெட்டியில் "காட்சிப் பொருளாக வைத்து" தன் தேவனைத் துதித்து மகிழ்கொண்டாடினார்!!                                                                                                                                  -Selected